#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

Saturday 3 September 2016

ஞானக்கூத்தன்


பெயர்: அரங்கநாதன்
புனைபெயர்: ஞானக்கூத்தன்
பிறந்த இடம்: திருஇந்தளுர், தஞ்சை (07.10.1938)
                                 படைப்பாற்றல்: கவிதை
படைப்புக்கள்:
  • ஞானக்கூத்தன் கவிதைகள்
விருதுகள்:
  • சாரல் விருது - 2009
  • விளக்கு விருது - 2004
இவர் பற்றி:
  • மரபுக் கவிதைகளில் தொடங்கி, பின், நவீனக் கவிதைகள் எழுதி, தமிழ் நவீன இலக்கிய வரலாற்றில் தன் முத்திரையைப் பதித்தவர் ஞானக்கூத்தன். இன்று வரை அவருடைய கவிதைகள் கவிஞர்களிடையே, எழுத்தாளர்களிடையே, வாசகர்களிடையே பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
    1960 இல் திருமந்திரத்தைப் படித்த பாதிப்பில் ஞானக்கூத்தன் என்கிற புனைப் பெயரைச் சூடிக்கொண்டார். அறுபதுகளில் சி.சு.செல்லப்பா, க.நா.சு., சி. மணி, ந. முத்துசாமி, ஏ.கே. இராமானுஜன் போன்றோருடன் இணைந்து செயல்பட்டார். முதல் புதுக்கவிதைகள் நடை இதழில் வெளியாகத் தொடங்கின. எழுபதுகளில் க்ரியா எஸ். இராமகிருஷ்ணன், சா. கந்தசாமி, ந. கிருஷ்ணமூர்த்தி ஆகியோரோடு இணைந்து கசடதபற இதழைத் தொடங்கினார். பிறகு ழ, கவனம் போன்ற இதழ்களின் பொறுப்புகளில் பங்கேற்றார். அகில இந்திய அளவிலும் உலக அளவிலும் பல கவிதை அரஙகுகளுக்குச் சென்றிருக்கிநார். ஞானக்கூத்தனின் தனித்தன்மை அவரது கவிதைகளின் தனித்தன்மை மட்டுமல்ல, தமிழ் மரபின் தொடர்ச்சியும் கூட ஞானகூத்தனின் கவிதைகளில் உள்ள அங்கதம் சிறப்பானது. 1952 இலிருந்து கவிதைகளை எழுதத் தொடங்கிய ஞானக்கூத்தனின் இளமைப் பருவ அரசியல் ஈடுபாடு தமிழ்நாடு மாநில சுயாட்சிஇ தமிழக எல்லை மீட்பு போராட்டங்களிலும் பொதுவுடைமை ஆதரவுச் செயல்பாடுகளிலும் இருந்தது.