#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

Sunday 20 November 2016

குறுந்தொகை


குறுந்தொகையின் உருவம்:
  • திணை = அகத்திணை
  • பாவகை        = ஆசிரியப்பா
  • பாடல்கள்      = 400
  • புலவர்கள்      = 205
  • அடி எல்லை    = 4-8
பெயர்க்காரணம்:
  • குறுமை+தொகை = குறுந்தொகை
  • குறுகிய அடிகளை உடையதால் குறுந்தொகை எனப்பட்டது.
வேறு பெயர்கள்:
  • நல்ல குறுந்தொகை
  • குறுந்தொகை நானூறு(இறையனார் களவியல் உரை கூறுகிறது)
தொகுப்பு:
  • தொகுத்தவர்    = பூரிக்கோ
  • தொகுப்பிதவர் = தெரியவில்லை
உரை, பதிப்பு:
  • இந்நூலின் 380 பாடல்களுக்கு பேராசிரியர் உரை எழுதியுள்ளார். 20 பாடல்களுக்கு நச்சினார்கினியர் உரை எழுதியுள்ளார். இத் தகவலை சீவக சிந்தாமணி சிறப்பாயிரத்தில் நச்சினார்கினியர் கூறியுள்ளார். ஆனால் இவை தற்போது கிடைக்கவில்லை.
  • நூலை முதலில் வெளியிட்டவர் = சௌரிபெருமாள் அரங்கனார்
  • நூலை முதலில் பதிப்பித்தவர் = சி.வை.தாமோதரம் பிள்ளை
கடவுள் வாழ்த்து:
  • இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்
  • இந்நூலில் குறிக்கப்படும் கடவுள் = முருகன்
குறுந்தொகையில் தொடரால் பெயர் பெற்றோர் = 18 பேர்:
அணிலோடு முன்றிலார்
விட்ட குதிரையார்
குப்பைக் கோழியார்
மீனெறி தூண்டிலார்
காக்கைப்பாடினியார்
வெள்ளிவீதியார்
குறுந்தொகையில் வடமொழிப் பெயர்கள்:
உருத்திரன்
சாண்டிலியன்
உலோச்சணன்
பௌத்திரன்
குறுந்தொகை குறிப்பிடும் அரசர்கள்:
சோழன் கரிகாலன்
குட்டுவன்
பசும்பூண் பாண்டியன்
பாரி
ஓரி
நள்ளி
குறுந்தொகை பாடிய பெண்பாற் புலவர்கள் = 13 பேர்:
ஔவையார்
வெள்ளிவீதியார்
வெண்பூதியார்
ஆதிமந்தி
பொதுவான குறிப்புகள்:
  • எட்டுத்தொகை நூல்களுள் முதன் முதலில் தொகுக்கப்பட்ட நூல் இதுவே.
  • பரணர் பாடல்களில் வரலாற்று குறிப்புகள் அதிகம் காணப்படும்.
  • வரலாற்று புலவர்கள் எனப்படுபவர்கள் = பரணர், மாமூலனார்
  • உரை ஆசிரியர்களால் மிகுதியாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் குறுந்தொகையே.
  • குறுந்தொகையின் 236 பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன
  • திருவிளையாடல் புராணத்தில் தருமி வரலாற்றுக்கு ஊற்றாக விளங்கியது “கொங்குதேர் வாழ்க்கை’ என்னும் குறுந்தொகை பாடலே.
  • இந்நூலில் 307, 391ஆம் பாடல்கள் மட்டும் ஒன்பது அடிகள் கொண்டவை.
முக்கிய அடிகள்:

  • நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று
    நீரினும் ஆரளவின்றே  - (தேவகுலத்தார்)
  • வினையே ஆடவர்க்கு உயிரே; வாணுதல்
    மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே  - (பாலை பாடிய பெருங்கடுங்கோ)
  • யாயும் ஞாயும் யாராகியரோ
    எந்தையும் நுந்தையும் எம்முறைகேளிர்
    நீயும் யானும் எவ்வழி அறிதும்
    செம்புலப் பெயல்நீர் போல
    அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே – (செம்புலப்பெயல் நீரார்)
  • கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
    காமம் செப்பாது கண்டது மொழிமோ
    பயலியது கெழீஇய நட்பின் மயிலியல்
    செறியெயிற் றரிவை கூந்தலின்
    நறியவும் உளவோ நீ அறியும் பூவே