#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

Sunday 20 November 2016

கலித்தொகை

கலித்தொகையின் உருவம்:
  • திணை  = அகத்திணை
  • பாவகை    = கலிப்பா
  • பாடல்கள் = 150
  • அடி எல்லை  = 11-80
  • பாடியோர் = 5
பெயர்க்காரணம்:
  • கலிப்பா வகையால் பாடப்பெற்ற ஒரே தொகை நூல் இதுவே.
கலிதொகையின் சிறப்பு:
திருத்தகு மாமுனி சிந்தாமணி கம்பன்
விருத்தத் கவி வளமும் வேண்டோம் – திருக்குறளோ
கொங்குவேள் மாக்கதையும் கொள்ளோம், நனி ஆர்வேம்
பொங்கு கலி இன்பப் பொருள்
என்றும் பழம் பெரும் புலவர்களால் பாராட்டப் பெற்றது.
வேறு பெயர்கள்:
  • கலி
  • குறுங்கலி
  • கற்றறிந்தோர் ஏத்தும் கலி
  • கல்விவலார் கண்ட கலி
  • அகப்பாடல் இலக்கியம்
உரை, பதிப்பு:
  • நூல் முழுமைக்கும் நச்சினார்கினியர் உரை உள்ளது.
  • நூலை முதலில் பதிப்பித்தவர் = சி.வை.தாமோதரம்பிள்ளை
கடவுள் வாழ்த்து:
  • இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்
  • இந்நூலில் கடவுள் வாழ்த்து குறிப்பிடும் கடவுள் = சிவபெருமான்
பாடியோர்:
பெருங்கடுங்கோன் பாலை; கபிலன் குறிஞ்சி;
மருதனிள நாகன் மருதம்; - அருஞ்சோழன்
நல்லுருந்திரன் முல்லை; நல்லந்துவன் நெய்தல்
கல்விவலார் கண்ட கலி
  • பாலை திணை பாடல்கள் பாடியவர்     = பெருங்கடுங்கோ (36 பாடல்கள்)
  • மருதம் திணை பாடல்கள் பாடியவர்    = மருதன் இளநாகனார் (36 பாடல்கள்)
  • நெய்தல் திணை பாடல்கள் பாடியவர்   = நல்லந்துவனார் (33 பாடல்கள்)
  • குறிஞ்சி திணை பாடல்கள் பாடியவர்   = கபிலர் (29 பாடல்கள்)
  • முல்லை திணை பாடல்கள் பாடியவர்   = சோழன் நல்லுருந்திரன் (17 பாடல்கள்)
தொகுப்பு:
  • இந்நூலை தொகுத்தவர் நல்லந்துவனார்.
  • தொகுப்பிதவர் பெயர் தெரியவில்லை.
  • நூலின் முதலில் உள்ள கடவுள் வாழ்த்தையும் இறுதியில் உள்ள நெய்தற் களியையும் நல்லந்துவனாரே பாடி நூல் முழுவதையும் தொகுத்தார் என்பார் நச்சினார்கினியர்.
பொதுவான குறிப்புகள்:
  • தொல்காப்பிய விதிப்படி கலிப்பாவால் அகத்திணையை பாடும் ஒரே எட்டுத்தொகை நூல் கலித்தொகை மட்டுமே.
  • பா வகையால் பெயர் பெற்ற நூல்கள் = கலித்தொகை, பரிபாடல்
  • கலித்தொகையின் பாடல்கள் ஓரங்க நாடக அமைப்பை பெற்றுள்ளது.
  • பெண்கள் பிறந்த வீட்டுக்கு உரியவர் அல்லர் என கலித்தொகை கூறுகிறது.
  • பாலை தினையை முதலாவதாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது
  • நூல் முழுவதுமே பாண்டியர்களை பற்றிய குறிப்பே உள்ளது.
  • பிற சங்க நூல்களில் கூறப்படாத, “கைக்கிளை, பெருந்திணை, மடலேறுதல்” போன்றவற்றை கூறியுள்ளது.
  • கலித்தொகையை நல்லந்துவனார் மட்டுமே பாடினார் எனக்கூரியவர் சி.வை.தாமோதரம்பிள்ளை
  • ஏறு தழுவுதல் பற்றி கூறும் ஒரே சங்க நூல் கலித்தொகை மட்டுமே
  • பெருந்திணை, கைக்கிளை பாடல்கள் இடம்பெற்றுள்ள ஒரே சங்க நூல் கலித்தொகை மட்டுமே.
  • காமக் கிழத்தி பேசுவதாக அமைந்த ஒரே சங்க நூல் கலித்தொகை.
  • மகாபாரத கதையை மிகுதியாக கூறும் நூல் இதுவே.
முக்கிய அடிகள்:

  • ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்
    போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
    பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்
    அன்பெனப்படுவது தன்கிளை செறா அமை
    அறிவேனப்படுவது பேதையர் சொல் நோன்றல்
    செரிவேனப்படுவது கூறியது மறா அமை
  • காழ்வரை நில்லாக் கடுங்களிற்று ஒருத்தல்
    யாழ்வரைத் தங்கியாங்கு
  • பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை
    மலையுளே பிறப்பினும் மலைக்கவைதாம் என்செய்யும்