Sunday, 20 November 2016
குறுந்தொகை
குறுந்தொகையின் உருவம்:
- திணை = அகத்திணை
- பாவகை
= ஆசிரியப்பா
- பாடல்கள்
= 400
- புலவர்கள்
= 205
- அடி எல்லை
= 4-8
பெயர்க்காரணம்:
- குறுமை+தொகை = குறுந்தொகை
- குறுகிய அடிகளை உடையதால் குறுந்தொகை எனப்பட்டது.
வேறு பெயர்கள்:
- நல்ல குறுந்தொகை
- குறுந்தொகை நானூறு(இறையனார் களவியல் உரை கூறுகிறது)
தொகுப்பு:
- தொகுத்தவர்
= பூரிக்கோ
- தொகுப்பிதவர் = தெரியவில்லை
உரை, பதிப்பு:
- இந்நூலின் 380
பாடல்களுக்கு பேராசிரியர் உரை எழுதியுள்ளார்.
20
பாடல்களுக்கு நச்சினார்கினியர் உரை
எழுதியுள்ளார். இத் தகவலை சீவக சிந்தாமணி சிறப்பாயிரத்தில் நச்சினார்கினியர்
கூறியுள்ளார். ஆனால் இவை தற்போது கிடைக்கவில்லை.
- நூலை முதலில் வெளியிட்டவர் = சௌரிபெருமாள் அரங்கனார்
- நூலை முதலில் பதிப்பித்தவர் = சி.வை.தாமோதரம் பிள்ளை
கடவுள் வாழ்த்து:
- இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்
- இந்நூலில் குறிக்கப்படும் கடவுள் = முருகன்
குறுந்தொகையில் தொடரால் பெயர்
பெற்றோர் = 18 பேர்:
அணிலோடு முன்றிலார்
|
விட்ட குதிரையார்
|
குப்பைக் கோழியார்
|
மீனெறி தூண்டிலார்
|
காக்கைப்பாடினியார்
|
வெள்ளிவீதியார்
|
குறுந்தொகையில் வடமொழிப் பெயர்கள்:
உருத்திரன்
|
சாண்டிலியன்
|
உலோச்சணன்
|
பௌத்திரன்
|
குறுந்தொகை குறிப்பிடும் அரசர்கள்:
சோழன் கரிகாலன்
|
குட்டுவன்
|
பசும்பூண் பாண்டியன்
|
பாரி
|
ஓரி
|
நள்ளி
|
குறுந்தொகை பாடிய பெண்பாற் புலவர்கள்
= 13 பேர்:
ஔவையார்
|
வெள்ளிவீதியார்
|
வெண்பூதியார்
|
ஆதிமந்தி
|
பொதுவான குறிப்புகள்:
- எட்டுத்தொகை நூல்களுள் முதன் முதலில் தொகுக்கப்பட்ட நூல் இதுவே.
- பரணர் பாடல்களில் வரலாற்று குறிப்புகள் அதிகம் காணப்படும்.
- வரலாற்று புலவர்கள் எனப்படுபவர்கள் = பரணர், மாமூலனார்
- உரை ஆசிரியர்களால் மிகுதியாக மேற்கோள் காட்டப்பட்ட நூல்
குறுந்தொகையே.
- குறுந்தொகையின் 236 பாடல்கள் மேற்கோள்
காட்டப்பட்டுள்ளன
- திருவிளையாடல் புராணத்தில் தருமி வரலாற்றுக்கு ஊற்றாக விளங்கியது
“கொங்குதேர் வாழ்க்கை’ என்னும் குறுந்தொகை பாடலே.
- இந்நூலில் 307,
391ஆம் பாடல்கள் மட்டும் ஒன்பது அடிகள் கொண்டவை.
முக்கிய அடிகள்:
- நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே - (தேவகுலத்தார்) - வினையே ஆடவர்க்கு உயிரே; வாணுதல்
மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே - (பாலை பாடிய பெருங்கடுங்கோ) - யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைகேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே – (செம்புலப்பெயல் நீரார்) - கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே