#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

Sunday 18 September 2016

சிறுபஞ்சமூலம்


சிறுபஞ்சமூலத்தின் உருவம்:
  • ஆசிரியர் = காரியாசான்
  • பாடல்கள் = கடவுள் வாழ்த்து 1, பாயிரங்கள்2, செய்யுட்கள்102
  • பாவகை = வெண்பா
பெயர்க்காரணம்:
  • கண்டங்கத்திரி, சிறு வழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய வேர்கள் இணைந்து மனிதனின் நோயைகுணப்பதுவது போல இந்நூல் மனிதனின் உள்ளப்பிணியைநீக்குகிறது.
பொதுவான குறிப்புகள்;
  • மருந்தின்பெயரால் பெயர் பெற்ற நூல்.
  • பஞ்சம் = ஐந்து, மூலம் = வேர்
  • ஐந்து வேர்கள் = கண்டங்கத்திரி, சிறு வழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி
  • சிறுபஞ்சமூலம்போன்றேபெருபஞ்சமூலம் என்ற ஒன்றும் உண்டு. அவை 1.வில்வம்,2.பெருங்குமிழ்,3.பாதிரி,4.தழுதாழை,5.வாகை
  • காரியாசனும்ஏலாதியின்ஆசிரியருமானகணிமேதாவியாரும்மதுரைத் தமிழ் ஆசிரியர் மாகாயானரின் ஒரு சாலை மாணவர்கள்.
  • இந்நூல்தொல்காப்பியர் குறிப்பிடும் “அம்மை” என்ற வனப்பிற்கு உரியது.
மேற்கோள்:
  • நூற்குஇயைத்த சொல்லின் வனப்பே வனப்பு
  • பேதைக்குஉரைத்தாலும்செல்லாது உணர்வு