#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

Sunday 18 September 2016

சிறுப்பாணாற்றுப்படை


சிறுப்பாணாற்றுப்படையின் உருவம்:
  • பொருள்        = ஆற்றுப்படை
  • தினை          = புறத்திணை
  • பாவகை       = ஆசிரியப்பா
  • அடி எல்லை    = 269
சிறப்புப் பெயர்:
  • சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப்படை(தக்கயாகப்பரணி உரையாசிரியர்)
பாணர்:
  • பாணர்கள் மூன்று வகைப்படுவர் = இசைப்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர்
  • சிறிய யாழைக் கையில் வைத்திருப்போர்சீறியாழ்பாணர்என்பர்
புலவர், தலைவன்:
  • பாடிய புலவர் = நல்லூர்நத்தத்தனார்
  • பாட்டுடைத் தலைவன் = ஒய்மா நாட்டு நல்லியக்கோடன்
கடை ஏழு வள்ளல்கள்:
பேகன்
மயிலுக்கு போர்வை அளித்தவன்
பாரி
முல்லைக்கு தேர் தந்தவன்
காரி
இரவலர்க்குகுதிரைகள்நல்கியவன்
ஆய்
நீலமணியையும், நாகம் தந்த கலிங்கத்தையும்சிவனுக்குஅளித்தவன்
அதியமான்
ஒளவைக்குநெல்லிக்கனிஅளித்தவன்
நள்ளி
நடைப்பரரிகாரம்முட்டாது கொடுத்தவன்
ஓரி
இரவலர்க்குநாடுகளை பரிசாக நல்கியவன்
உரை;
  • நச்சினார்க்கினியர் உரை உள்ளது
  • மு.வை.அரவிந்தன் உரை
பொதுவான குறிப்புகள்:
  • தக்கயாகப்பரணியின் உரையாசிரியர் இந்நூலை “சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப்படை” என்கிறார்.
  • திண்டிவனப் பகுதி ஒய்மா நாடு ஆகும்.
  • நல்லியக்கோடனின் தலைநகரம் “கிடங்கில்”
  • இந்நூல் கடை ஏழு வள்ளல்கள் பற்றி கூறுகிறது.
  • வேளாளர் வீடுகளில் நாய் வளர்த்ததைப் போல, உமணர்கள் வீட்டில் குரங்குகளைவளர்த்தனர்.
முக்கிய அடிகள்:
  • பன்மீன் நடுவே பால்மதிபோல
    இன்நடைஆயமொடுஇருந்தோன்
  • முல்லை சான்ற கற்பின்மெல்லியல்
    மடமாநோக்கின்வாணுதல்விறலியர்
  • தமிழ்நிலை பெற்ற தாங்கறுமரபின்
    மகிழ்நனைமறுகின் மதுரை
  • எழுவர்பூண்டஈகைச்செந்துகம்