#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

Sunday 18 September 2016

சீவக சிந்தாமணி


சீவகசிந்தாமணியின் உருவம்:
  • ஆசிரியர் = திருத்தக்கதேவர்
  • காலம் = கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு
  • சமயம் = சமணம்
  • பாவகை = விருத்தப்பா
  • பாடல்கள் = 3145 விருத்தங்கள்
சீவகசிந்தாமணியின் வேறு பெயர்கள்:
  • மணநூல்
  • முக்திநூல்
  • காமநூல்
  • மறைநூல்
  • முடிபொருள்தொடர்நிலைச் செய்யுள்(அடியார்க்குநல்லார்)
  • இயற்கை தவம்
  • முதல் விருத்தப்பா காப்பியம்
  • சிந்தாமணி தமிழ் இலக்கியநந்தாமணி
ஆசிரியரின் வேறு பெயர்கள்:
  • திருத்தகு முனிவர்
  • திருத்தகுமகாமுனிவர்
  • தேவர்
ஆசிரியர் குறிப்பு:
  • திருத்தக்கதேவர் சோழமரபினர்.
  • இவர் எழுதிய மற்றொரு நூல் = நரிவிருத்தம்
  • சீவகசிந்தாமணியை தேவர் எட்டே நாட்களில் படைத்தார்.
  • இவர் நூலைஅரங்கேற்றிய இடம் = மதுரை தமிழ் சங்கம்
  • இவரை பற்றிய குறிப்பு கர்நாடக மாநிலம் சிரவணபெலகுளா கோவில் கல்வெட்டில் உள்ளது.
நூல் அமைப்பு:
  • 13 இலம்பகம்
  • 3145 பாடல்கள்
  • முதல் இலம்பகம் = நாமகள் இலம்பகம்
  • இறுதி இலம்பகம் = முக்தி இலம்பகம்
நூல் குறிப்பு:
  • சீவகன்சிந்தாமணியுடன்ஒப்பிடப்பட்டுள்ளான்.
  • சிந்தாமணி என்பது கேட்டதை கொடுக்கும் தேவலோகத்தில் உள்ள ஒரு மணி.
பொதுவான குறிப்பு:
  • சைவனானகுலோத்துங்க மன்னன் விரும்பிகற்ற காப்பியம்
  • நூல் முழுமைக்கும்சைவரானநச்சினார்கினியர் உரை எழுதியுள்ளார்.
  • உ.வே.சாபதிபித்த முதல் காப்பியம் இது.
  • கிறித்துவரானஜி.யு.போப்இந்நூலை, “தமிழில் உள்ள இலக்கியச்சின்னங்களுள் மிக உயர்வானது. தமிழ்மொழியின்இலியதும்ஓடிசியுமான புதிய பெரிய இக்காப்பியம்உலகப்பெருங்காப்பியங்களுள் ஒன்று” என கூறினார்.
  • ஜி.யு.போப்திருதக்கதேவரை “தமிழ் கவிஞர்களுள் இளவரசன்” எனப்புகழ்ந்துள்ளார்.
  • வடமொழியில் உள்ள கத்திய சூளாமணி, சத்திர சூளாமணி என்ற இரு நூலையும் தழுவி எழுதப்பட்டது.
  • கம்பர், “சிந்தாமணியிலும் ஓர் அகப்பை முகந்துகொண்டேன்” என்று கூறியதாக செவிவழிச் செய்தி ஒன்றும் உண்டு.
நச்சினார்கினியர்:
  • இவர் சைவர்.
  • சீவசிந்தாமணிக்கு இருமுறை உரை எழுதியதாக கூறப்படுகிறது.
  • இவரை, “உச்சிமேற்கொள் புலவர் நச்சினார்கினியர்” எனப்போற்றுவர்.
  • இவர் கொண்டு கூட்டி பொருள் உரைப்பதில் வல்லவர்
  • இவர் “தமிழ்மல்லிநாதசூரி” எனப்போற்றப்படுவார்
மேற்கோள்:
  • இவ்வாறாகப்பிறப்பதுவோ
    இதுவோமன்னற்கு இயல் வேந்தே
  • மெய்வகை தெரிதல் தம்மை
    விளங்கிய பொருள்கள் தம்மை
    பொய்வகைஇன்றித்தேறல் காட்சி
    ஐம்பொறியும் வாட்டி
    உய்வகைஉயிரைத்தேயாது
    ஒழுகுதல் ஒழுக்கம், மூன்றும்
    இவ்வகை நிறைந்த போழ்தே
    இருவினையும்கழியும் என்றான்